கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள செந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் ( வயது 49 )இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் நேற்று அன்னூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட 25 பாக்கெட் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ...

பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவில் விவசாயிகள் தென்னை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு உற்பத்தியாகும் செவ்விளநீர், பச்சை நிற இளநீர்களை தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களான சென்னை, மதுரை, திண்டுக்கல், கடலூர், தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக கோடை காலத்தில் தேவை ...

கோவை பீளமேடு காந்திமா நகர், எப்.சி.ஐ. ரோட்டை சேர்ந்தவர் மோகன். இவரது மகன் அர்ஜுன் (வயது 17) இவர் பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார்.அதே பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் தங்கி இருந்தார் . 3 நாட்களாக உடல்நிலை சரியில்லை .இதனால் கல்லூரிக்கு செல்லவில்லை. ...

கோவை ரயில் நிலையம் எதிர்புறம் உள்ள ஒரு லாட்ஜில் கடந்த 12ஆம் தேதி ஒருவர் அறை எடுத்து தங்கினார். அவர் தங்கி இருந்த அறையின் கதவு 3 நாட்களாக திறக்கப்படாமல் இருந்தது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் அங்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு ஒருவர் விஷம் ...

கோவை செட்டிபாளையம் போலீசார் நேற்று கொச்சி -சேலம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் அருகே சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையொட்டி அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒண்டிப்புதூர் சுங்கம் பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் பாரதிராஜா ( ...

கோவை தொண்டாமுத்தூரில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது இது குறித்து கிழக்கு சித்திரைச்சாவடி கிராம நிர்வாக அதிகாரி பழனி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இறந்தவருக்கு 45 வயது இருக்கும் .அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை பற்றி ...

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள பெரியபோது, புதுக் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் நாகஜோதி ( வயது 10) இவர் பெரியபோது அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்து 2 நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ...

கோவை: கரூா் பக்கம் உள்ள தாந்தோணிமலையைச் சோந்த வேணுகோபால். இவரது மகன் சுரேந்தா் (வயது 28) இவரது செல்போனுக்கு கடந்த 13ஆம் தேதிஒரு அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர’தான் தாம்பரம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் இருந்து இருந்து சப் இன்ஸ்பெக்டர்முருகன் பேசுவதாகவும், தங்களது கைப்பேசி கட்செவி அஞ்சல் எண் ஆபாச படம் எடுக்கும் கட்செவி அஞ்சல் ...

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் நீர் மின் நிலையம் மற்றும் குடியிருப்புகள் உள்ளது. சமீபகாலமாக இரண்டு குட்டிகளுடன் 3 பெரிய காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகிறது. பெரும்பாலும் சாலைகளிலேயே யானைகள் நடமாடுவதால் அரசு பஸ்கள் மற்றும் தனியார் ...