மளிகை கடையில் பதுக்கி வைத்து குட்கா விற்ற 4 வியாபாரிகள் கைது..!

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள செந்தாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் ( வயது 49 )இவர் அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடம் அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் நேற்று அன்னூர் போலீசார் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது தடை செய்யப்பட்ட 25 பாக்கெட் குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார் .

இதே போல சிறுமுகை போலீசார் ஆலாங்கொம்பு பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் சோதனை நடத்தினார்கள் அப்போது அங்கு 40 பாக்கெட் குட்கா இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிறுமுகை வ.உ.சி நகரை சேர்ந்த பிரகதீஸ்வரன் (வயது 40) கைது செய்யப்பட்டார்.

சிறுமுகை ஜடையம்பாளையம் ஜே .ஜே. நகர் சேர்ந்தவர் மருதையன் (வயது 59) இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நடத்திய சோதனையில் 36 பாக்கெட் குட்கா இருந்தது தெரியவந்தது,இது தொடர்பாக மருதையன் கைது செய்யப்பட்டார்.

ஊட்டி கோத்தகிரி பக்கம் உள்ள சக்தி நகரைசேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 58) இவர் காரமடையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே பெட்டி கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் காரமடை போலீசார் நேற்று நடத்திய திடீர் சோதனைகள் 17 பாக்கெட் குட்கா இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக பழனிச்சாமி கைது செய்யப்பட்டார்.குட்காவும், ரூ 680பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.