சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கடந்த 10.04.2023 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில், சிறைத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, சிறைவாசிகளின் நலனுக்காக நிபுணர் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறைவாசிகளின் உணவுமுறை மற்றும் உணவின் அளவினை, ஆண்டுக்கு ரூ.26 கோடி கூடுதல் செலவினத்தில் மாற்றியமைக்கப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து, சட்ட அமைச்சர் ...
கோவை மாவட்ட ஆயுதபடையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளுநர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் கவாத்து சிறப்பாக நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து ஆயுதப் படையில் பணிபுரியும் அனைவருக்கும் குளிர்,மழை காலங்களில், பயன்படும் வகையில் தரமான ஜெர்க்கின்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேற்று வழங்கினார்.மேலும், ஆயுதப்படையில் பணிபுரியும் ஒவ்வொரு காவலர்களின் குறைகளை கேட்டறிந்து ...
ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் இரண்டு பயணிகள் ரயில் ஒரு சரக்கு இரயில் உள்பட 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து ஒடிசாவில் இயக்கப்படும் ரயில்களுக்கு ரத்து, பகுதிநேர ரத்து மற்றும் மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. பாலசோர்: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில், கொல்கத்தாவின் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில், தடம் புரண்டிருந்த பெங்களூரு – ஹவுரா ...
கோவையில் இருந்து சென்னை நெல்லை மும்பை உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக கோவையில் இருந்து சென்னை சேலம் நீலகிரி எக்ஸ்பிரஸ் உட்பட ஆறு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் முக்கியத்துவம் வாய்ந்த கோவை, பெங்களூரில் இடையே ஒரே ஒரு பகல் நேர உதய எக்ஸ்ப்ரஸ் ரயில் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் ...
தமிழகத்திலுள்ள 33 ஆயிரத்து 841 கூட்டுறவு ரேஷன் கடைகளிலும், பணமற்ற பரிவர்த்தனை விரைவில் அறிமுகப்படுத்தப்படுமென்று, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் உறுதியளித்துள்ளார்.தமிழகம் முழுவதும், 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இவற்றில், காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியைத் தவிர்த்து, மற்ற மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அனைத்திலும், யு.பி.ஐ.,வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த வாரத்தில், ...
போக்குவரத்துத் துறை சார்பில் தொழிற்சங்கங்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசு பேருந்துகள் இயக்காமல் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் நேற்று திடீரென்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து துறையில் ஒப்பந்த முறையில் நியமனம் செய்ய முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்து துறை ஊழியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒப்பந்த அடிப்படையில் ...
கோவை குனியமுத்தூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புட்டுவிக்கி சாலையில் புதிதாக புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டது. அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றினார். இதில் கோவை தெற்கு பகுதி துணை போலீஸ் கமிஷனர் சண்முகம், உதவி போலீஸ் கமிஷனர் ரகுபதி ராஜா, ...
கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:- கோவை மாவட்ட பகுதிகளில் விபத்துக்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .குறிப்பாக திருச்சி ரோடு சிந்தாமணி புதூரில் உள்ள சிக்னல், பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஈச்சனாரி பிரிவு சிக்னல்’ மலுமிச்சம்பட்டி சிக்னல், ஆகிய 3 சிக்னல்களில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது. அங்கு போலீசார் ...
அரக்கோணம்: அரக்கோணம், ஜோலார்பேட்டை நகரங்களை இணைக்கும் வகையில் வந்தே மெட்ரோ ரயில் விரைவில் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் இந்தியாவின் முதல் ரயில் பாதையாக கடந்த 1853-ம் ஆண்டு சென்னை ராயபுரத்தில் இருந்து அரக்கோணம் வழியாக வாலாஜா வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. வரலாற்று சிறப்புகள் வாய்ந்த அரக்கோணம் ரயில் நிலையம் ...
மகிழ்ச்சியான சாலைகள் என்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இளைஞர்கள் – சமூக ஆர்வலர்கள் வேதனை !!! இந்திய திருநாடு கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிற்கு உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை பின்பற்றி நம் முன்னோர்கள் இருந்து வந்தனர். அதனை உலக நாடுகள் அனைவரும் வியப்புடன் பார்த்து வரவேற்றனர். ...