தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக வரும் 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகள் மூடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் 400 மேற்பட்ட தீப்பெட்டி ...
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் கட்டணப் பட்டியல்களில் எல்.பி.ஜி கட்டணம்”, “எரிவாயு கூடுதல் கட்டணம் போன்ற கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசே கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை கொடுத்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ், நுகர்வோர் சேவைக் கட்டணங்கள் மீதான தற்போதுள்ள வழிகாட்டுதல்களைத் தவிர்ப்பதற்காக, ...
புதிய தொழிலாளர் சட்டங்களை தொழில் நிறுவனங்கள் இன்று முதல் அமல்படுத்துவதால் தொழிலாளர்களுக்கான பண பயன்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த பல்வேறு தொழிலாளர் சட்டங்கள், நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்னதாகவோ அல்லது சுதந்திரம் அடைந்த பின்னர் அதாவது, 1930-ம் ஆண்டு முதல் 1950-ம் ஆண்டு வரை இயற்றப்பட்டவையாக இருந்தன. அப்போது இருந்த நாட்டின் ...
வல்லூறுகள் பாதுகாப்பு குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள நிபுணரின் பரிந்துரைகளைப் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் சூா்யகுமாா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், இந்தியாவில் 1980-களில் வல்லூறுகளின் எண்ணிக்கை சுமாா் 4 கோடி இருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 90,000-ஆகக் குறைந்துவிட்டது. தமிழகத்தில் நீலகரி, தருமபுரி, ஈரோடு ...
புதுடெல்லி: இந்தியாவில் 67 சதவீத பட்டதாரி இளைஞர்களுக்கு தகுதியான வேலை கிடைப்பதில் பெரும் சிக்கல் நீடிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 50 லட்சம் இளைஞர்கள் பட்டதாரிகளாக உருவெடுத்தனர். ஆனால், அவர்களில் சுமார் 28 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைத்தது. ...
ஈரான் போர் காரணமாக கோவை – அபுதாபி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை எதிர்த்து இஸ்ரேலும் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது.இந்நிலையில் துபாயில் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான் வழியை மூடி உள்ளன. இதன் காரணமாக சர்வதேச விமான ...
இந்தியா-அமெரிக்கா இடையேயான இடைக்கால வா்த்தக ஒப்பந்தத்துக்கான விதிமுறைகளை இறுதி செய்வதற்காக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இருதரப்பு பேச்சுவாா்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய வா்த்தக அமைச்சக வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன. இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் விதித்த அதிரடி பரஸ்பர வரி விதிப்பு செல்லாது என அமெரிக்க உச்சநீதிமன்ற தீா்ப்பளித்தது மற்றும் ...
டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக முக்கிய செய்திகள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.இதற்கிடையே திருப்பூருக்கு நிம்மதி தரும வகையில் முக்கியமான தகவல் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது ஜவளி துறைக்கு ஜீரோ வரியை அமெரிக்கா விதிக்கும் என்று பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்தியா அமெரிக்கா இடையே ஓராண்டாகவே வர்த்தக மோதல் நிலவி வந்தது. வர்த்தகப் ...
ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஐடி துறையின் எதிர்காலம் குறித்து தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளார்.கோடிங் அனுபவமே இல்லாத ஒருவர் ஏஐ உதவியுடன் ஒரு செயலியை உருவாக்கியுள்ளார். மேலும், ஏஐ மாடல்கள் மிகக் கடினமான கோடிங் பணிகளையும் மனிதர்களை விடச் சிறப்பாகச் செய்து முடிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.நானும் ...
நாட்டின் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கொடிசியா பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி கோவையில் 4 நாட்கள் நடைபெறுகிறது. கொடிசியா பில்ட் இன்டெக் 2026 கண்காட்சி, நான்கு நாட்கள் நடைபெறுகிறது.கோவை கொடிசியா வணிக வளாகத்தில், கொடிசியா பில்ட் இன்டெக் 15-வது பதிப்பு, 2026 கண்காட்சி வரும் பிப்ரவரி 6-ம் தேதி முதல் 9-ம் ...













