மர்ம காய்ச்சலுக்கு 10-வயது சிறுமி பலி..

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள பெரியபோது, புதுக் காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகள் நாகஜோதி ( வயது 10) இவர் பெரியபோது அரசு உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்து 2 நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அருள்ஜோதியின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமானது. அவரை சிகிச்சைக்காக அம்பராம்பாளையத்தில் தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து தந்தை செந்தில்குமார் ஆனைமலை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.