கோவை குளத்தில் மிதந்து வந்த ஆண் சடலம் – கொலையா? போலீசார் தீவிர விசாரணை..!

கோவை தொண்டாமுத்தூரில் உள்ள முனீஸ்வரன் கோவில் அருகே உள்ள குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது இது குறித்து கிழக்கு சித்திரைச்சாவடி கிராம நிர்வாக அதிகாரி பழனி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார். இறந்தவருக்கு 45 வயது இருக்கும் .அவர் யார்? கொலை செய்யப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பதை பற்றி விவரம் தெரியவில்லை?.இது தொடர்பாக சப் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.