கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் கே.ஜி .சாவடி போலீசார் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது எட்டிமடை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பின்புறம் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது ...
கோவை விளாங்குறிச்சியில் உள்ள எஸ். ஆர். அவென்யூவை சேர்ந்தவர் வித்யாசங்கர் (வயது 44) தொழிலதிபர் இவரது மனைவி பிந்து ( வயது 40) இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகள் உள்ளார். வித்யாசங்கர் திருப்பூரில் சொந்தமாக மில் நடத்தி வந்தார். இங்கு நூல் தயாரித்து பல்வேறு பகுதிகளுக்கு விற்பனை செய்து வந்தார் .மேலும் அவர் தொழிலை ...
கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஒட்டலில் 3-வது மாடியில் அறை எடுத்து அழகு நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ...
திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகத்திற்கு எதிராக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் குண்டு கட்டாக தூக்கி சென்று. தரையில் தரதரவென இழுத்து சென்று காவல் வாகனத்தில் ஏற்றியதால் இரு தரப்பினருக்கும இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் விவசாயிகள் சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டது. திரு ஆருரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளின் ...
புதுச்சேரி மாநில பாஜக தலைவராக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி.யை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்த ஓபிஎஸ் பிரிவு மாநில செயலாளர் ஓம்.சக்தி சேகர் பாஜக தலைவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர், புதுச்சேரி மாநிலத்தின் பாஜக தலைவராக ராஜ்யசபா உறுப்பினர் செல்வகணபதி மாநில தலைவராக நியமனம் ...
கோவை: கோவையில் டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட மாநகராட்சி சார்பில் கூடுதலாக 200 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். கோவை மாநகரில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியை மாநகராட்சி நிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். குடியிருப்பு பகுதியில் டெங்கு கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் தண்ணீர் தேங்க பயன்படும் டயர், இளநீர் ஓடுகள், மூடி வைக்கப்படாத சிமென்ட் தொட்டிகள், ...
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டாவது லீக் போட்டியிலும் இந்திய ஹாக்கி அணி அபார வெற்றி பெற்றது. 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 45 நாடுகளை சேர்ந்த 12 ஆயிரத்திற்கு அதிகமான வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்றுள்ளனர். வரும் 8ம் தேதி வரையில் 40 விளையாட்டுகள் 400 வகையிலான போட்டிகள் நடைபெற ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தபால் தந்தி தலைமையிலும் முன்னிலையிலும் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நுகர்வோர் அமைப்பு பொறுப்பாளர் சங்கரநாராயணன். வணிகர்கள் சங்க பொறுப்பாளர் ஹபிபுல்லா நம்ம மேட்டுப்பாளையம் சமூக நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் S.பாஷா அஞ்சல் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ரங்கராஜ் பொதுத் தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் முகமது அலி ...
தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் தமிழக அரசால் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரேஷன் அரிசி, கோதுமை, மானிய விலை சிலிண்டர் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டார். இதன் பேரில் பொள்ளாச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு ...
கோவை ஆர். எஸ். புரம். பெரியசாமி ரோட்டில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர் மகாவீர் ஜெயின்,வியாபாரி. இவரது மனைவி பயல் எம்.ஜெயின் (வயது 32) சாட்டட் அக்கவுண்ட்ன்ட் ஆகவேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று ஆர். எஸ் புரம் மெக்ரிக்கர் ரோட்டில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இருவர் இருசக்கர ...













