கோவை ஒட்டல் பியூட்டி பார்லரில் விபசாரம்: 4 மசாஜ் அழகிகள் மீட்பு – ஒருவர் கைது..!

கோவை பீளமேடு அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஒட்டலில் 3-வது மாடியில் அறை எடுத்து அழகு நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கு மசாஜ் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக பீளமேடு போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் நேற்று இரவு அங்கு திடீர் சோதனை நடத்தினார்.அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த மசாஜ் அழகிகள் கிருஷ்ண பிரியா (24) ரேணுகா ( 28) தீபிகா ( 25 ) பபீயா (24)ஆகியோர் மீட்கப்பட்டு பெண்கள் காப்பகத்தில் அடைக்கப்பட்டனர். இதை நடத்தி வந்ததாக புலியகுளம் தாமு நகரை சேர்ந்த ஸ்ரீ ஹரி ( 47 ) கைது செய்யப்பட்டார்.பியூட்டி பார்லர் மூடப்பட்டது..