மேட்டுப்பாளையம் தபால் அலுவலகத்தில் அஞ்சல் சமூக வளர்ச்சி விழா.!!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தபால் தந்தி தலைமையிலும் முன்னிலையிலும்
அஞ்சல் சமூக வளர்ச்சி விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நுகர்வோர் அமைப்பு பொறுப்பாளர் சங்கரநாராயணன். வணிகர்கள் சங்க பொறுப்பாளர் ஹபிபுல்லா நம்ம மேட்டுப்பாளையம் சமூக நல அமைப்பு ஒருங்கிணைப்பாளர் S.பாஷா அஞ்சல் மன்ற உறுப்பினர் ராஜேந்திரன் ரங்கராஜ் பொதுத் தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் முகமது அலி ஜின்னா, சன்பீர் ஆகியோர் உள்ளிட்ட பல சமூக நல அமைப்புகளை சார்ந்தோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர் . அஞ்சல் சமூக வளர்ச்சி விழா அஞ்சல் துறை மற்றும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் வழங்கும் அனைத்து அஞ்சல், நிதி சேவைகளையும் ஒரே தளத்தில் பொதுமக்களுக்கு வழங்க வழிவகை செய்கிறது என்று கூறினார்.
இந்த விழாவையொட்டி அஞ்சல் கோட்டத்தில் பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் அஞ்சலக சேமிப்பு கணக்கு, அஞ்சலக ஆயுள் காப்பீடு, ஆதார் எடுத்தல் மற்றும் புதுப்பித்தல் என மத்திய, மாநில அரசு சார்ந்த அனைத்து நலத்திட்டங்களும் அவரவர் இல்லம் தேடி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அஞ்சல் கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் பயன்பெறுவோருக்கு அஞ்சல் துறை மூலம் பணப்பரிவர்த்தனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதில் அஞ்சல் துறை கோட்டத்திற்கு உள்ளிட்ட கிராமங்கள் முழுமையாக பயன்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உதவித்தொகை இந்தியா போஸ்ட் பேமென்ட் பேங்க் கணக்குகள் மூலம் வழங்கப்படுகிறது. மேற்கூறிய சேவைகளை சிறந்த முறையில் பொது மக்களுக்கு வழங்கிய மயிலாடுதுறை கோட்ட அஞ்சல் ஊழியர்கள் இவ்விழாவில் கவுரவிக்கப்பட உள்ளனர்..