பெண் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி12 பவுன் செயின் பறிப்பு ..!

கோவை ஆர். எஸ். புரம். பெரியசாமி ரோட்டில் உள்ள ஒரு அபார்ட்மெண்ட்டில் வசிப்பவர் மகாவீர் ஜெயின்,வியாபாரி. இவரது மனைவி பயல் எம்.ஜெயின் (வயது 32) சாட்டட் அக்கவுண்ட்ன்ட் ஆகவேலை பார்த்து வருகிறார் .இவர் நேற்று ஆர். எஸ் புரம் மெக்ரிக்கர் ரோட்டில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை இருவர் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்தனர்.அங்குள்ள மருத்துவமனை அருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்தவர்களில் ஒருவன் கீழே இறங்கி கத்தியை காட்டி மிரட்டி பயல் எம். ஜெயின் கழுத்தில் கிடந்த 12 பவுன் செயினை கொள்ளையடித்தான். பின்னர் இருவரும் இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்று விட்டனர்”.இதுகுறித்து ஆர் எஸ் புரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்கு பதிவு செய்தது விசாரணை நடத்தி வருகிறார்.