197 கிலோ குட்கா பறிமுதல் – வியாபாரி கைது..!

கோவை மதுக்கரை அருகே உள்ள எட்டிமடை பகுதியில் கே.ஜி .சாவடி போலீசார் நேற்று மாலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது எட்டிமடை பகுதியில் உள்ள ஒரு மளிகை கடைக்கு பின்புறம் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது அங்கு மூட்டை மூட்டையாக குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து புகையிலை பொருட்களை மறைத்து வைத்திருந்ததாக வியாபாரி அருள்ராஜ் ( வயது 40 )கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 197 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது .இதன் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும்.இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..