தமிழகத்தில் 20 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில் சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் தொடா்பாக மின்வாரிய வட்டாரத்தினா் கூறியதாவது: திட்டம் தொடங்குவது குறித்து அறிவுரைகள் வழங்கும் ஆலோசகா்களைத் தோந்தெடுக்க மாா்ச் 20-ஆம் தேதி முதல் இணையவழி ஒப்பந்தம் கோரப்படுகிறது. தோவாகும் ஆலோசகா்கள், சூரிய மின் உற்பத்தி நிலையத்தை ...

ரஷ்யா ரசாயனம், உயிரி ஆயுதங்களை பயன்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகவே உக்ரைன் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த இருப்பதாகவும் இதற்கான ஆய்வகங்கள் உக்ரைனில் இருப்பதாகவும் குற்றம் சாட்டி இருப்பதாக ஐநா, உலக நாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. உக்ரைன் ரசாயன ஆய்வகங்களை அமைத்துள்ளதாகவும் அதனால் ரசாயன ஆயுத தாக்குதலில் ஈடுபட கூடும் என்று ரஷ்யா குற்றம் சாட்டியது. இதனை ...

திருப்பதி: ஆந்திர சட்டப்பேரவையில் முதல்வர் ஜெகன் மோகன் முன்னிலையில் மாநில நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் ரெட்டி ரூ.2.56 லட்சம் கோடியில் 2022-23ம் வருவாய் ஆண்டிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டை துவக்கினார். பட்ஜெட் உரைக்கு பின்னர் முதல்வர் ஜெகன் மோகன் பேசுகையில், இந்த பட்ஜெட்டால். அனைத்து தரப்பினரும் வளம் ...

சென்னை மேயர் ப்ரியா, நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சென்னை: மாநகராட்சி மேயர் பிரியா பாரிமுனையில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகம்மாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் 50-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தன் கையால் அன்னதானத்தை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாமி ...

டெல்லி: பாகிஸ்தான் நாட்டில் இந்தியா ராணுவத்திற்குச் சொந்தமான ஏவுகணை விழுந்துள்ளது தொடர்பாக இந்திய பாதுகாப்புத் துறை முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. உக்ரைன் நாட்டில் தொடங்கி உள்ள போர் 2 வாரங்களைக் கடந்தும் தொடரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ...

நேட்டோவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி மோதல் மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் என்பதால், ரஷ்ய படைகளுடன் அமெரிக்கா சண்டையிடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.. கடந்த 24-ம் தேதி அன்று, ரஷ்யப் படைகள் உக்ரைனில் சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் என்ற பெயரில் தாக்குதல் நடத்த தொடங்கின.. உக்ரைனின் பாதுகாப்பு தளங்கள், விமான நிலையங்கள், ...

மதுரையில் தனக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் அமைத்த முத்துமணியின் மறைவுக்கு அவரது மனைவியிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினி ஆறுதல் கூறினார். மதுரையைச் சேர்ந்த முத்துமணி (65), நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் பெயரில், தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக கடந்த 1976ஆம் ஆண்டு மதுரையில் ரஜினிக்கு மன்றம் தொடங்கி பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்தார். முத்துமணி ...

கோவை: ”கல்வி என்பது தேசிய அளவில் இருக்க வேண்டும். எனவே உயர்கல்வியை மாற்றியமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்” என கோவையில் நடந்த தென்மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக கவர்னர் ஆர்என் ரவி பேசினார். இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டம் கோவையில் உள்ள பாரதியார் பல்கலை கழகத்தில் ...

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மன், மார்ச் 16-ம் தேதி பஞ்சாப் முதல்வராக பதவியேற்கிறார். 48 வயதான பக்வந்த் மன் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். அவரின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார். பகவந்த் சிங் மன், ஒரு முன்னாள் நகைச்சுவை நடிகர் ஆவார். தொலைக்காட்சியில் ‘ஜுக்னு மஸ்த் ...

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பு 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில், தற்போது ...