பைக்கில் இருந்து விழுந்து தனியார் நிறுவன ஊழியர் பரிதாப பலி..

திருப்பூர் மாவட்டம் பாண்டியன்நகரில் உள்ள ஆர் எஸ் புரம் .முதல் விதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் தமிழ்ச்செல்வன் ( வயது 27) தனியார் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று கோவை- சேலம் ரோட்டில் புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார் .கொள்ளு பாளையம் பகுதியில் சென்ற போது திடீரென்று ஒருவர் ரோட்டை கடந்தார். இதனால் அவர் திடீர் பிரேக் போட்டபோது பைக்கில் இருந்து கீழே விழுந்தார். இவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர் . அங்கு சிகிச்சை அளித்தும் பலனிக்காமல் இறந்தார். இது குறித்து அவரது மனைவி சுவாதிகா கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜதுரை ரோட்டின் குறுக்கே பாய்ந்த ரங்கசாமி என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.