இறந்து போன தன் தாயுடன் செல்வதாக கூறி விஷம் குடித்த மகன் பலி..

கோவை ராமநாதபுரம் சுங்கம் காமராஜர் நகரை சேர்ந்தவர் பண்ணாரி. இவரது மகன் பரத் குமார் ( வயது 18) 8 ஆண்டுகளுக்கு முன்பு இவரது தாயார் இறந்துவிட்டார்.இதனால் மனமுடைந்த பரத்குமார் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார். நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்தார் .தனது தந்தையிடம் அம்மாவிடம் நான் செல்கிறேன் என்று கூறினாராம். பிறகு தான் அவர் எலி கொல்லி மாத்திரை சாப்பிட்டது தெரிய வந்தது .அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார்.இதுகுறித்து தந்தை பண்ணாரி ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..