2 குழந்தைகளுடன் தாய் வடமாநில காதலனுடன் மீண்டும் ஓட்டம்..!

கோவை : நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பக்கம் உள்ள கரிசல்பட்டி, மேலப்பிராணியை சேர்ந்தவர் ஞானதுரை (வயது 34) இவர் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையத்தில் குடும்பத்துடன் தங்கி இருந்து டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி சோனியா (வயது 26) இவர்களுக்கு செல்சியா ( வயது 6) டேனியல் ராஜா ( வயது 3) என்ற இரு குழந்தைகள் உள்ளனர் .இந்த நிலையில் சோனியா கடந்த ஆண்டு 21-11-2022 அன்று வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகி விட்டார்.விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த சித்தரஞ்சன் என்ற வட மாநில வாலிபருடன் காதல் வைத்திருந்ததாகவும், அவருடன் மாயமாகிவிட்டார் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சோனியாவையும் குழந்தையும் மீட்டு கணவருடன் ஒப்படைத்தனர். இந்த நிலையில் சோனியா மீண்டும் மாயமாகிவிட்டார். இது குறித்து ஞானதுரை சுல்தான் பேட்டை போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.