கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-கோவை மாநகரில் சில பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் எதிர அமைப்புகள் சார்பில் சுவரொட்டிகளும், போஸ்டர்களும், போட்டி சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டு வருகிறது. எனவே கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் ஒட்டப்படும் சுவரொட்டிகள் சட்டம்- ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் ஆட்சேபிக்குமான கருத்துக்கள் இருக்கும் பட்சத்தில் ...

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், களிமண்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட குத்துக்கல்வலசை கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் கிராம மக்களை நேரில் சந்தித்து அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார். மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற ...

சென்னை: முதல்வர் பதவியை பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு விட்டுக்கொடுத்து சமூக நீதி, சமத்துவத்தைப் பாதுகாக்க மு.க.ஸ்டாலின் தயாராக இருக்கிறாரா என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் பற்றி பேசிய விவகாரத்தில், பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து, அச்சுறுத்தல் விடுத்து வரும் நிலையில், தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான ...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், பொள்ளாச்சி சாலை சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிஷப் தார்ப் மாணவர் விடுதி வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு பாதுகாவலாராக கோவை மாவட்டம், வால்பாறை பாராளை எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த, இஸ்ரவேல் மகன் வினித்குமார் (25), என்பவரை விடுதி காப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ...

நீதிமன்ற உத்தரவின் படி மறுகுடியமர்வு செய்யப்பட உள்ள தெங்குமரஹாடா கிராமத்தில் வனத்துறை கூடுதல் முதன்மைச் செயலாளர் சுப்ரியா சாகு ஐஏஎஸ் ஆய்வு. மறுகுடியமர்வு செய்யப்படும் குடும்பங்களுக்கு பவானிசாகரில் வீட்டுமனை பட்டா வழங்க இடம் தேர்வு.. சத்தியமங்கலம்: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாயாற்றின் கரையில் அமைந்துள்ள தெங்குமரஹாடா வன கிராமத்தில் வசிக்கும் மக்களை வெளியேற்றி ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் ...

கோவை தெற்கு உக்கடம் , பிலால் எஸ்டேட் 2 -வது வீதியைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மகன் பெரோஸ்கான் ( வயது 28) பேக் கடை வைத்துள்ளார்.இவரது மனைவி பிரசவத்துக்காக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.நேற்று முன்தினம் அவரது அறையில் பைக்குள் வைத்திருந்த ரூ 66 ஆயிரத்தை காணவில்லை .யாரோ ...

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள பூராண்டம் பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி இரவில் மர்ம ஆசாமிகள் புகுந்து 16 மதுபாட்டில்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்க்குகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை ...

தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிபிஎம் கட்சியினரை காவல் துறையினர் தடுத்ததால் இருவருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல்துறையினர் தடுப்புகளை தாண்டி ரயில் நிலையத்திற்குள் நுழைய ஓடிய பெண்களை காவல்துறையினர் துரத்தி சென்றனர். ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விலைவாசி உயர்வுக்கும், வேலை வாய்ப்பின்மைக்கும் ...

தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- பொதுமக்கள் சாலை மறியல்.. தஞ்சை சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்தவர் செரீனா பேகம் ...