தஞ்சையில் சோகம்… பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதி தாய் பரிதாப பலி..

தஞ்சை ஈஸ்வரி நகர் பகுதியில் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் சென்ற இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தாய் சம்பவ இடத்திலேயே பலியானார். இரண்டு குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி- பொதுமக்கள் சாலை மறியல்..

தஞ்சை சுந்தரம் நகர் பகுதியை சேர்ந்தவர் செரீனா பேகம் இவர் இன்று காலை தனது மகள் ஷபிகா (13 ) மகன் முகமது சையத் (7) ஆகியோரை அருகிலுள்ள ஈஸ்வரி நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். அப்போது ஈஸ்வரி நகர் ரெட்டிபாளையம் ரோடு இந்தியன் ஸ்கூல் அருகில் சாலையில் திரும்பும் போது எதிரே வந்த லாரி இவர்கள் மேல் மோதியதில் சம்பவ இடத்திலேயே செரினா பேகம் உயிரிழந்தார் . மகள் ஷபிகா மற்றும் மகன் முகமது சையத் ஆகியோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தனர். அருகில் உள்ளவர்கள் உடனடியாக ஷபிகா, முகமது சையத் அவர்களை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளனர். இதனால் காலை பள்ளிக்கு செல்லும் நேரம் என்பதால் அந்தப் பகுதி மிகவும் போக்குவரத்துக்கு இடையூறு ஆக உள்ள பகுதி என்பதாலும் அந்த பகுதியில் போக்குவரத்து காவலர்கள் யாரும் இல்லை. போக்குவரத்து காவலர்கள் இருந்து  போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி இருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது. ஒரு உயிர் போய் இருக்காது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் . மேலும் இந்த விபத்துக்கு காரணமான லாரியின்  உரிமையாளர் ஓட்டுநர் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சாலை மறியல் ஈடுபட்டு வந்தனர்.