கோவை மருத்துவமனைக்குள் புகுந்து பணம் திருட்டு – பெண் கைது..!

கோவை தெற்கு உக்கடம் , பிலால் எஸ்டேட் 2 -வது வீதியைச் சேர்ந்தவர் ராஜா முகமது. இவரது மகன் பெரோஸ்கான் ( வயது 28) பேக் கடை வைத்துள்ளார்.இவரது மனைவி பிரசவத்துக்காக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.நேற்று முன்தினம் அவரது அறையில் பைக்குள் வைத்திருந்த ரூ 66 ஆயிரத்தை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர்.இது குறித்து பெரோஸ்கான் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தார். இதில் பணம் திருடியது ஒரு பெண் என்பது தெரிய வந்தது.இதையடுத்து அந்தப் பெண்ணை நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் ராமநாதபுரம், புலியகுளம் தாமு நகரைச் சேர்ந்த சூர்யா மனைவி தமிழரசி (வயது 21) என்பது தெரிய வந்தது..இவரது சொந்த ஊர் கடலூர் மாவட்டம் பண்ருட்டி அம்பேத்கார் நகர் ஆகும்.இவரிடமிருந்து ரூ. 10 ஆயிரத்து 40 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.