கோவை டாஸ்மாக் கடையில் திருடிய 3 பேர் கைது..!

கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகே உள்ள பூராண்டம் பாளையத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி இரவில் மர்ம ஆசாமிகள் புகுந்து 16 மதுபாட்டில்கள் மற்றும் கண்காணிப்பு கேமரா ஹார்ட் டிஸ்க்குகளை திருடி சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர்.. இந்த நிலையில் நேற்று மாலை பச்சா கவுண்டன் பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்திய போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிள் வந்த 3 பேரை பிடித்து விசாரணை செய்தனர் ..விசாரணையில் இவர்கள்தான் பூராண்டாம் பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் திருட்டு நடத்தியவர்கள் என்பது தெரிய வந்தது.இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர்..விசாரணையில் அவர்கள் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள முத்து நாயக்கன்பட்டியை சேர்ந்த வெல்டர் சிவசங்கர் என்ற பால்பாண்டி ( வயது 23 )மடத்துக்குளம் அருகே உள்ள கணேசபுரத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி முருகானந்தம் (வயது 22) பழனி அருகே உள்ள நாகூரைச் சேர்ந்த விவசாயி விக்னேஷ் ( வயது 31) என்பது தெரியவந்தது அவர்களிடமிருந்து 4250 ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களும், மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.’இவர்கள் மீது மடத்துக்குளம் கணியூர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது..