குத்துக்கல் வலசை கிராமத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் முகாம்.!!

இராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம், களிமண்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட குத்துக்கல்வலசை கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் கிராம மக்களை நேரில் சந்தித்து அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது குறித்து கேட்டறிந்தார்.
மேலும் பல்வேறு துறையின் மூலம் அரசு நலத்திட்ட உதவிகள் தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பித்து அரசின் திட்டங்களை பெற்று பயன்பெற வேண்டுமென கேட்டுக் கொண்டதுடன், ஊராட்சியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்று குடும்ப உறுப்பினர்களிடம் தங்களுக்கு தேவையான வருவாய்த்துறை சான்றுகள் உரிய காலத்தில் கிடைக்கப்பெறுகிறதா எனவும், நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியாக பொருட்கள் வழங்கப்படுகிறதா எனவும் குடிநீர் வழங்குவதன் விவரம் போன்றவற்றை பொதுமக்களிடம் நேரடியாக கேட்டறிந்தார். மேலும் ஊராட்சியின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்கள் உடனுக்குடன் செயல்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன் பொதுமக்களிடம் தெரிவித்தார். கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார் துணை வட்டாட்சியர் பரமசிவன் தலைமை நில அளவர் சொக்கநாதன் திருப்புல்லாணி வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்..