கோவை சிங்காநல்லூர் மசக்காளிபாளையம் ரோட்டில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் ( வயது 41)இவர் ராமநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கேசியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவில் அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் வந்து பார்த்தபோது அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. ...

கோவை வேலாண்டிப்பாளையம் கோவில்மேடை சேர்ந்தவர் கணேஷ்பாபு (வயது 24). டிரைவர். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (22). தொழிலாளி. இந்த நிலையில் கணேஷ்பாபுவின் தம்பி கமலேஸ்வரன் (19) என்பவர் அண்ணனின் நண்பர் கார்த்திக்கை மரியாதை இல்லாமல் பேசி வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கமலேஸ்வரன், கார்த்திக்கு போன் ...

கோவை: பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை சுப்பேகண்டன் புதூரை சேர்ந்தவர் பிரசாந்த் கணேஷ் (வயது 44). லாரி டிரைவர். சம்பவத்தன்று அவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி தூங்க சென்றார். மறுநாள் காலை எழுந்து வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது. இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அவர் அக்கம் பக்கத்தில் தேடி ...

கோவைக்கு முதலமைச்சர் வருகையையொட்டி மாநகராட்சி நிர்வாகம் கண் துடைப்பிற்காக அறை குறையாக பணிகளை செய்து வந்தாக புகார் எழுந்துள்ளது.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 நாட்கள் சுற்றுப் பயணமாக கோவைக்கு வருகை தந்து உள்ளார். இன்று ஈச்சனாரி பகுதியில் நடைபெறும் அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின், பின்னர் பொள்ளாச்சி ...

கோவை நீலிகோணாம்பாளையம் தச்சன் தோட்டத்தை சேர்ந்தவர் அன்பரசன்(30). மின்வாரிய ஊழியர். இவர் நேற்று முன்தினம் தச்சன் தோட்டத்தில் உள்ள ஒரு மளிகை கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த 2 பேர் அன்பரசனை வழிமறித்து தகராறு செய்தனர். இதில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த 2 பேரும் தகாத வார்த்தைகளால் பேசி இரும்பு ...

பணமோசடி புகாரில் வழக்கில் சிக்கியுள்ள போலி பெண் பாதிரியார், போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற்ற விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் பேராயர் காட்ப்ரே நோபல். இவர் சில நாட்களுக்கு முன்பு பெண் பாதிரியார் மானுவேல் மரியா செல்வம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதில் பெண் ...

பொள்ளாச்சி பாலமநல்லூரை சேர்ந்தவர் சேட் முகமது. இவரது மகள் மதினாபேகம் (வயது 26). இவர் வீட்டில் சிறிய ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் மதினாபேகத்தின் சகோதரிக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அதனால் அவர் தனது சகோதரியை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு சகோதரியை ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பின்னர் மதினாபேகம் தனது ...

புதுடில்லி : பா.ஜ.,வின் மூத்த தலைவரை கொல்ல சதித் திட்டம் தீட்டிய ஐ.எஸ்., பயங்கரவாதி, ரஷ்யாவில் கைது செய்யப்பட்டது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்த நம் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் என்.ஐ.ஏ., உயர் அதிகாரிகள் அடங்கிய கூட்டுக்குழு ரஷ்யா செல்கிறது.ரஷ்யாவில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நபரை, அந்நாட்டின் உளவு அமைப்பான, எப்.எஸ்.பி., எனப்படும், ...

திருப்பூரில் தனியார் பேருந்து பயணத்தின் போது படியில் அமர்ந்து மது அருந்தி செல்லும் குடிமகன்கள்– சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ –குடிமகன்கள் மட்டுமின்றி தனியார் பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை !!   திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து — அனுப்பர்பாளையம்.வரை 6 நம்பர் தனியார் பேருந்து இயக்கப்பட்டு.வருகிறது. ...

விவசாய தோட்டத்தில் இருந்து ஆடுகளை இளைஞர்கள் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அடுத்த தொட்டிய பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவர் சுமார் 30 ஆடுகள் வளர்த்து வருகிறார். தினமும் மேய்ச்சலுக்கு வெளியே அழைத்துச் சென்று மாலையில் மீண்டும் தனது தோட்டத்தில் உள்ள ஆடு பட்டியில் அடைத்து ...