3 லாரிகளில் மணல் கடத்தல் – 5 பேர் கைது..!

3 லாரிகளில் மணல் கடத்தல் .5பேர் கைது..!   கோவை மாவட்டம் அருகே உள்ள குறுநெல்லி பாளையம் சந்திப்பில் கப்பளாங்கரை கிராம நிர்வாக அதிகாரி ஜெயபிரகாஷ் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார் அப்போது அந்த வழியாக வந்த 3 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். அதில் 9 யூனிட் கிராவல் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இது தொடர்பாக லாரி டிரைவர்களானகிணத்துக்கடவு, மூட்டம் பாளையம்மேஷ் குமார் ( வயது 36)சின்ன நெகமம்,உதவி பாளையம்,பிரகாஷ் (வயது 39) நல்லட்டிப்பாளையம் சாந்தகுமார் (வயது 46) கக்கடவு சோமசுந்தரம் ( வயது 39 )செங்குட்டு பாளையம் தீப சிலம்பரசன்( வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 9 யூனிட் மணலும், 3டிப்பர் லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.