மயங்கி விழுவது போல் நடித்து பெண்ணிடம் நகை பறிப்பு – மர்ம நபர் கைவரிசை..!

கோவை சிங்காநல்லூர் சக்தி நகர் நேதாஜி புரத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சத்தியபாமா (வயது 46) இவர் நேற்று அவரது வீட்டின் முன் கோலம் போட்டுக் கொண்டிருந்தார் .அப்போது அங்கு வந்த ஒருவர் திடீரென்று மயங்கி விழுந்தார் .இதை பார்த்த சத்தியபாமா அவரை தூக்கி விட்டார் .எழுந்த அந்த ஆசாமி திடீரென்று சத்யபாமா கழுத்தில் கிடந்த இரண்டு பவுன் செயினை பறித்துக் கொண்டு ஓடி விட்டார். இதுகுறித்து சத்தியபாமா சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்..