கோவை மேம்பால கட்டுமான பணிக்கு வைத்திருந்த இரும்பு கம்பிகள் திருட்டு – சிறுவன் உட்பட 3 பேர் கைது..!

கோவை அவிநாசி ரோட்டில் மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது .இந்த மேம்பால கட்டுமானத்திற்கு தேவையான இரும்பு கம்பிகள் ரோடு ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளன இந்த நிலையில் நேற்று முன்தினம் லட்சுமிமில் சந்திப்பு பகுதியில் மேம்பாலம் கட்டுமானத்திற்கு வைக்கப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளை ஸ்கூட்டரில் வந்த 3 பேர் திருடி சென்றனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா மூலம் ஆய்வு செய்தனர்.இதில் இரும்புக் கம்பிகளை திருடி சென்றது காந்திபுரம் இளங்கோ நகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 20) அரவிந்தராஜ் (வயது 19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்கள் 3பேரையும் போலீசார் கைது செய்தனர்..இரும்பு கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது..