கஞ்சா செடி வளர்த்த வாலிபர் கைது..!

கோவை : மேட்டுப்பாளையம் பகுதியில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட தனிப்படை போலீசார் சம்பவ இடமான சமன்னா தண்ணீர் தொட்டி அருகே சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது போதை பொருளான கஞ்சா செடி வளர்த்ததற்காகவும் மற்றும் கஞ்சா வைத்திருந்ததற்காகவும் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் மகன் முகமது யாகூப் (வயது 36) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் 400 கிராம் எடையுள்ள ஒரு கஞ்சா செடி மற்றும் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை கோவை மாவட்ட காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 401 பேர் மீது 298 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 612.021 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவார்கள் அல்லது சட்டம்-ஒழுங்கிற்கு எதிராக செயல்படுபவர்கள் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்..