சிறுமுகை அருகே 15-வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

சிறுமுகை அருகே 15-வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

கோவை மாவட்டம் சிறுமுகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பள்ளியில் படிக்கும் 15 வயது சிறுமி பாலியல்பலாத்காரம் செய்யப்பட்டார்.இது தொடர்பாக நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த மோகன்.இவரது மகன் மணிகண்டன் (வயது 30) என்பவர் மீது மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார்செய்யப்பட்டது இதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்ததார்… மேற்கண்ட நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மேற்கண்ட நபர் பாலியல் குற்றவாளி என உறுதி செய்து மணிகண்டன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.. அவரது உத்தரவின்படி பாலியல் வன்புணர்ச்சி வழக்கு குற்றவாளியான மணிகண்டனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.மேலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 8 போக்சோ குற்றவாளிகள் உட்பட 26 நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனமாவட்ட காவல் கண்காணிப்பாளர்பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.