தாய் – மகளுக்கு கத்தி குத்து – கணவர் உட்பட 2பேர் மீது புகார்..! 

தாய் – மகளுக்கு கத்தி குத்து – கணவர் உட்பட 2பேர் மீது புகார்..!  கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள புகலூர் தாளத் துறையை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 38)
இவருக்கு மனைவியும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர்.கருத்து வேறுபாடு காரணமாக கடந்து 2 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறார்கள். இந்த நிலையில் நேற்று அவரது கணவர் ராஜேந்திரன்,அவரது நண்பரான மேட்டுப்பாளையம் இடையர்பாளையத்தைசேர்ந்த ரவி ( வயது 39) ஆகியோர் தாளதுறையில் உள்ள மனைவி வீட்டுக்கு சென்றனர்.அவரை குடும்ப நடத்த வருமாறு ராஜேந்திரன் அழைத்தார். அதற்கு மனைவி மறுத்தார் இதனால் ஆத்திரமடைந்த இருவரும் மனைவியை கத்தியால் குத்தினார்கள். இதை தடுத்த அவரது 14வது மகளுக்கும் கத்திகுந்து விழுந்தது. இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் இது குறித்து மனைவி சிறுமுகை போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர் சித்ரா வழக்கு பதிவு செய்து ரவியை கைது செய்தனர்.கணவர் ராஜேந்திரனை தேடி வருகிறார்கள் .இவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உட்பட 4பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.