கோவையில் அதிர்ச்சி… 2 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த ராட்ச தந்தை போக்சோவில் கைது..!

கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் 29 வயது மருத்துவ பிரதிநிதி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 வயதில் ஒரு மகள் உள்ளார் .இந்த நிலையில் நேற்று முன் தினம் 2 வயது சிறுமி நீண்ட நேரமாக அழுது கொண்டே இருந்தது. இதை பார்த்த தாய் அந்த சிறுமியிடம் பசிக்கிறதா? சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று கேட்டார். அதற்கு அந்த குழந்தை இல்லை என்று தலையை அசைத்து. ஆனாலும் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த தாய் தனது குழந்தையை அரவணைத்துக் கொண்டு ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். அப்போது அந்த குழந்தை வலிக்கும் இடத்தை காட்டியது. அடுத்து அந்த குழந்தை பரிசோதனை செய்த போது காயம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் குழந்தையை கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கே குழந்தையை பரிசோதித்த டாக்டர் குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதனால் குழந்தை வலி தாங்க முடியாமல் தொடர்ந்து அழுது கொண்டே இருந்தது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அந்த குழந்தைக்கு அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.இது பற்றி தகவல் அறிந்ததும் கோவை தெற்கு பகுதி அனைத்து மகளிர் போலீசார் அரசு மருத்துவமனைக்கு சென்று சிறுமி மற்றும் சிறுமியின் தாயிடம் விசாரணை நடத்தினார்கள்.அப்போது தந்தையே தனது 2 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இது குறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் சிறுமியின் தந்தையாகிய மருத்துவ பிரதிநிதி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அவரை நேற்று மாலை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்தனர். கோவையில் 2 வயது சிறுமியை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது..