கோவை கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரர் நகரை சேர்ந்தவர் அசோகன் (வயது 50 )இவர் கோவை ஆர் .எஸ். புரம். பகுதியில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் கார் பார்க்கிங் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.நேற்று குடிபோதையில் படம் பார்க்க வந்த 2பேர் அசோகனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த 15 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிக்கு சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த கூலித் தொழிலாளி சபரி (வயது 22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி நேரில் ...

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள செல்லனூரில் மகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் தங்கராசு என்பவர் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். நள்ளிரவு கோவிலின் கதவை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர் அம்மன் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் ...

திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, கடந்த 2015ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. ஏழு ஆண்டுகள் விசாரணைக்குப் பின் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, திமுக எம்.பி. ஆ.ராசா, சி.கிருஷ்ணமூர்த்தி, கோவை ஷெல்டர்ஸ் ப்ரமோட்டர்ஸ் இந்தியா ...

கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கார் வெடிகுண்டு வெடித்தது. இதில் தாக்குதல் நடத்துவதற்காக காரை ஓட்டி வந்த ஜமேஷா முபின் உயிரிழந்தான். இந்த வழக்கில் முகமது அசாருதீன், அப்சர்கான், முகமது தல்கா, முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது தவுபிக், உமர் பாரூக், பெரோஸ்கான், ...

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில் போலீசார்.நேற்று கோவை புறநகர் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடத்தினார்கள். அப்போது சூலூர் அரசூர் பிரிவு அருகே கஞ்சா விற்றதாக மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஷாம்பு (வயது 38) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதே போல துடியலூர் அருகே ...

கோவை காந்திபார்க் அருகே உள்ள பொன்னையராஜபுரத்தை சேர்ந்தவர் ஷிபானா (வயது 23). திருநங்கையான இவர் சமையல் தொழில் செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த சரவணன், அவரது மகன் ராமன் ஆகியோர் ஷிபானாவின் பாலினம் குறித்து பேசி அவரை தொந்தரவு கொடுத்து வந்தனர். சம்பவத்தன்று அவர் சென்ற போது பாலினம் குறித்து தகாத வார்த்தைகளால் ...

ஈரோடு மாவட்டம் கொடுமுடி சாலைப்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி கவுண்டர் என்பவரின் மகன் சாமியப்பன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்துள்ளார் அதில் கடந்த பல ஆண்டுகளாக தொழில் செய்து வருகிறேன். வீட்டின் அருகில் வசித்து வரும் ...

கோவை மாவட்டம் சோமனூர் ராமச்சியம்பாளையம் பகுதியில் வசிப்பவர். சுரேந்திரா (வயது 23) ஒடிசாவை சேர்ந்தவர்.இவர் நண்பர்களுடன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவாரூரைச் சேர்ந்த ஆகாஷ்(23), விருதுநகரைச் சேர்ந்த தமிழ்வாணன் (32) மற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த குணசேகர் (வயது 29) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்து கத்தியை காட்டி மிரட்டி இவர்களிடமிருந்த செல்போன்களை பறித்தனர். ...

கோவை ரத்தினபுரி அண்ணா நகரை சேர்ந்தவர் ரியாஸ் அகமது ( வயது 22 )கார் பாலிஷ் வேலை செய்து வருகிறார். நேற்று இவர் கண்ணப்பன் நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தனது நண்பர் கருப்புசாமியுடன் மது அருந்த சென்றார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தீபகணேஷ், நெய் அஜித் மற்றும் சிலர் மது அருந்தி ...