முதியவரிடம் ரூ.15 லட்சம் ஆன்லைன் மோசடி.!!

Cybercrime.

கோவை பீளமேடு, லட்சுமிபுரம் ராஜலட்சுமி நகரை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 64) கடந்த 9-3 – 2024 அன்று இவரது செல்போனுக்கு டெலிகிராம் ஆப் மூலம் ஒரு தகவல் வந்தது .அதில் ஒரு நிறுவனத்தில் பகுதி நேர ஊழியராக வேலையில் சேர்ந்து முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது . இதை நம்பி தாமோதரன் பல்வேறு தவணைகளில் ரூ15 லட்சத்து 49 ஆயிரத்து,192 அனுப்பி வைத்தார். அவருக்கு எந்த லாபமும் வரவில்லை. அவருக்கு வந்த செல்போன் எண்ணிடம் தொடர்பு கொள்ளவும் முடியவில்லை . இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தாமோதரன் கோவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.