டாஸ்மாக் கடை அருகே குட்கா விற்பனை – 2 வியாபாரி கைது.!!

கோவை :மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவி என்ற பெரியசாமி ( வயது 58) இவர் துடியலூர், கே.என்.ஜி.புதூர், ஆனைகட்டி ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் நேற்று கவுண்டம்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் .சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட 1354 குட்கா பாக்கெட் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக ரவி என்ற பெரியசாமி கைது செய்யப்பட்டார் .

இதே போல தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்தவர் ஞானராஜ் ( வயது 52 )இவர் கே. என் ஜி. புதூர் ஆனைகட்டி ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருகிறார் .இவரது கடையில் துடியலூர் போலீசார் நடத்திய சோதனையில் 682 குட்கா பாக்கெட் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஞானராஜ் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 682 பாக்கெட் குட்கா, ரூ 3,100 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.