கல்லால் தாக்கி தாய் படுகொலை – மகன் கைது.!!

கோவை :ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி பக்கம் உள்ள நரசிங்க கோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி முத்துமாரி (வயது 39) இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக முத்துமாரி தனது கணவரை விட்டு பிரிந்து அன்னூர் எல்லப்பாளையம் நெசவாளர் காலனியில் வசிக்கும் தனது மூத்த மகன் நந்தகுமார் (வயது 19) வீட்டில் வசித்து வந்தார். நந்தகுமார் எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்து வந்தார். இதை அவரது தாயார் கண்டித்தார் .இதனால் ஆத்திரம் அடைந்த நந்தகுமார் அங்கு கடந்த கிரைண்டிங் கல்லை எடுத்து தாயார் முத்துமாரி தலையில் ஓங்கி அறைந்தார். பின்னர் தப்பி  ஓடி விட்டார். படுகாயம் அடைந்த முத்துமாரி அதே இடத்தில் இறந்தார். இது குறித்து அன்னூர் போலீசில் புகார் செய்யப்பட்டது . இன்ஸ்பெக்டர் நித்யா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். தப்பி ஓடிய நந்தகுமாரை நேற்று கைது செய்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..