ஸ்கூட்டரில் சென்ற நர்சிடம் 5 பவுன் செயின் பறிப்பு – வாலிபர் கைது.!!

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள தோட தாசனூரை சேர்ந்தவர் கவின் குமார். இவரது மனைவி பிரவீனா ( வயது 34 ) அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று மாலை வேலை முடிந்து தாசனூர் ரோட்டில் தனது ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் பின் தொடர்ந்து வந்த 2 ஆசாமிகள்  ஏதோ ஒரு உதவி தேவை என்று கூறி இவரது ஸ்கூட்டரை நிறுத்த சொன்னார்கள். பிரவீனா ஸ்கூட்டரை  நிறுத்தினார். அப்போது பைக்கில் பின்னால் இருந்த ஆசாமி இறங்கி வந்து அவரது கழுத்தில் கடந்த 5 பவுன் தங்கச் செயினை  பறித்துவிட்டு இருவரும் பைக்கில் தப்பி ஓடிவிட்டனர். இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேட்டுப்பாளையம் ,பழைய முனிசிபாலிட்டி ரோட்டில் உள்ள குஞ்ச வனம்வீதியைச் சேர்ந்த சூர்யா ( வயது 21 )என்பவரை கைது செய்தார். மற்றொரு வரை தேடி வருகிறார்கள்.