சேலம் நகராட்சி மாஜி அதிகாரி மனைவிக்கு ஒரு வருட சிறை தண்டனை – கோவை நீதிமன்றம் தீர்ப்பு.!!

கோவை : சேலம் நகராட்சியாக இருந்த போது நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனராக பணியாற்றியவர் கணேசன் (வயது 78 ) இவர் 1. 1 . 1993 முதல் 31- 12 -2003 வரை வருமானத்துக்கு அதிகமாக ரூ.53 லட்சத்து 6 ஆயிரத்து 699 க்கு சொத்து சேர்த்ததாகவும், இதற்கு அவரது மனைவி கனிமொழி ( வயது 77 ) உடந்தையாக இருந்ததாகவும் கோவை லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 2003 ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை லஞ்ச ஒழிப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்தது . வழக்கை விசாரித்த நீதிபதி மோகன ரம்யா குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் நகராட்சி அதிகாரி கணேசன், அவரது மனைவி கனிமொழி ஆகியோருக்கு தலா ஓரு வருட சிறை தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.