தலைநகர் டெல்லியில் தி.மு.க அலுவலக திறப்பு விழாவுக்காகவும், பிரதமர் மோடியைச் சந்திப்பதற்காகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, போக்குவரத்துத்துறை அமைச்சர் மற்றும் பலரை சந்தித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின், டெல்லி மெகல்லா கிளினிக் மற்றும் அரசுப் பள்ளிகளை அந்த மாநில முதல்வர் கெஜ்ரிவாலுடன் ...

அரசு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இதனால் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் விடுமுறை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் செல்வராசு தலைமை ...

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் டெல்லியில் உள்ள விக்யான் பவனில் மூன்றாவது தேசிய நீர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மத்திய ஜவுளித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நீர் மேலாண்மையில் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ள ...

பள்ளி வாகனங்களில் சினிமா பாடல்களை ஒலிபரப்பக் கூடாது: தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு சென்னை: பள்ளி பேருந்தில் மாணவர்களை இருப்பிடத்தில் இருந்து அழைத்து வரும் போது பஸ்சில் உதவியாளர் ஒருவர் இருக்க வேண்டும் என தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை மூலம் உத்தவிடப்பட்டுள்ளது. சென்னையில் தனியார் பள்ளி மாணவன் தான் பயணம் செய்த பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த ...

திருச்சி: திருச்சி அருகே 11ம் வகுப்பு மாணவனை திருமணம் செய்த அதே பள்ளியை சேர்ந்த 26 வயது ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர் கடந்த 5ம் தேதி பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்றார். ...

ஆப்கானிஸ்தான் கலாச்சாரத்தின்படி ஒரு திட்டம் வரையப்படும் வரை பெண்களுக்கான பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிப்பு.. ஆப்கானிஸ்தானை கடந்த ஆண்டு ஆகஸ்டில் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு எதிராக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனிடையே, கொரோனாவால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் ...

சென்னை: கூடுதல் கட்டணம் செலுத்தாத மாணவிகளின் வருகை பதிவேட்டை மாற்றி தேர்வெழுத அனுமதி மறுத்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு ரூ.3 கோடியை சென்னை உயர்நீதிமன்றம் அபராதமாக விதித்துள்ளது. சென்னை குன்றத்தூரில் மாதா பல் மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இங்கு படித்து வந்த மாணவிகளிடம் கல்விக் கட்டணம் அல்லாமல் கூடுதலாக கட்டணத்தை ...

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 20 பேரைக் கொண்ட பள்ளி மேலாண்மை குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் குழந்தை தொழிலாளர் மற்றும் குழந்தை திருமணம், மாணவர்கள் இடைநிற்றல் போன்றவற்றைத் தடுக்கும் வகையில், வருகின்ற ஏப்ரல் மாதம், முதல் வாரத்தில் 20 பேர் கொண்ட பள்ளி மேலாண்மை குழுவானது அரசுப்பள்ளிகளில் ...

6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் புகழ் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து இளங்கலை படிக்க, முழுச் செலவையும் அரசே ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்குப் பார்வையாகும். உலகளாவியபங்களிப்புடன், ...

போதை பொருள் தடுப்பு, கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு தேசிய மாணவர் படையினர் பேரணி. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் கிருஷ்ணா, , ராமகிருஷ்ணா, நேரு, சி.எம்.எஸ், ஸ்ரீராமு, வானவராயர் அக்ரி, பி.எஸ்.ஜி, கே.பி.ஆர். இந்துஸ்தான், போன்ற கல்லூரிகளைச் சார்ந்த தேசிய மாணவர் படை மாணவர்கள் 200 பேர் போதை பொருட்கள் தடுப்பு, கொரோனா விழ்ப்புணர்விற்காக பதாகைகளை ஏந்தி ...