கோவை கோவில்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 42). இவர் கோவை ராமநாதபுரம் ஒலம்பசில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வருகிறார். சம்பவத்தன்று இவர் திருச்சி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த நபர் ஒருவர் மாரியப்பனிடம் பணம் கேட்டு மிரட்டினார். அவர் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் ...

கோவையில் கடந்த மாதம் 23-ந் தேதி கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை ( என்.ஐ.ஏ.) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் நாசவேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இந்த ...

சிங்கப்பூரிலிருந்து கோவைக்கு வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு – சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சந்தேகப்படும்படி சிங்கப்பூரிலிருந்து வந்த 4 பேரை பிடித்து வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை செய்தார்கள். அவர்களிடமிருந்து 7.50 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் ...

கோவை வெறைட்டிஹால் ரோட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30), தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது நண்பர் சூரியபிரகாஷ் என்பவருடன் வெறைட்டிஹால் ரோடு பகுதியில் நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் பொது இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி அதில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்த மணிகண்டன் மற்றும் சூரிய பிரகாஷ், அவரை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் உள்ள பாரதி வீதியில் தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு கேஷியராக வேலை பார்ப்பவர் ஆறுமுகம் ( வயது 72) இவர் நேற்று பணியில் இருந்தார். அப்போது பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டை சேர்ந்த அருண் கார்த்திக் (வயது 22) என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது மனைவி நித்யாவை பார்க்க வந்தார்.அப்போது அவர் குடிபோதையில் ...

ஐரோப்பிய நாடுகளில் சீனா சட்ட விரோதமாக காவல் நிலையங்களை அமைத்திருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியான‌ நிலையில் கனடாவிலும் அதேபோல் சட்டவிரோதமான காவல் நிலையங்களை அமைத்துள்ளதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கனடா தேர்தலில் சீனா குறுக்கீடு செய்ய முயற்சி செய்வதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது பற்றி ...

கேரளா லாட்டரி விற்ற கோவை பா.ஜ.க நிர்வாகி கைது தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் கேரளாவில் இருந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் காந்திபுரம் ராம் நகர் பகுதியில் உள்ள திரையரங்கு அருகே காட்டூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அங்கு ...

கோவையில் உரிய ஆவணங்கள் இன்றி பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 80 இலட்ச ரூபாய் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் ஏறி பயணித்து உள்ளார். அப்போது தான் வைத்து இருந்த கைப் பைக்கு டிக்கெட் எடுக்காமல் ...

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடியின் மேல்முறையீட்டு மனுவை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை தள்ளுபடி செய்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. நீரவ் மோடி மோசடி, மற்றும் பணமோசடி விசாரணையை இந்தியாவில் இனி எதிர்கொள்ள வேண்டும். மேலும் அமலாக்க இயக்குநரகம் (ED) மற்றும் மத்திய ...

கோவையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு தீபாவளிக்கு முந்தைய நாள் கார் வெடித்தது. இதில், காரில் இருந்த ஜமீஷா முபின் என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் இருந்து நாட்டு வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டதோடு, ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் ...