10ம் வகுப்பு மாணவியை ஆபாச படம் எடுத்து மிரட்டி பலாத்காரம் : டிரைவர் போக்ஸோவில் கைது – 2 பேர் தப்பி ஓட்டம்..!

கோவை அடுத்து மதுக்கரை பகுதியைச் சேர்ந்த 15 வயதான மாணவி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவருக்கு அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதனால் அவர்கள் செல்போனில் பேசி நேரில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த டிரைவரான குணசேகரன் என்பவர் அந்த மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததால் அவர் அடிக்கடி அந்த மாணவியின் வீட்டின் அருகே சுற்றி வந்தார். இதனால் அவருக்கு அந்த மாணவி வேறு ஒரு நபர் காதலிப்பது தெரிய வந்தது. இதனால் குணசேகரன் அதிர்ச்சி அடைந்தார். சம்பவத்தன்று அந்த மாணவி தனது வீட்டின் அருகே நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த குணசேகரன் அந்த மாணவியிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு ஓடினார். அவரை பின் தொடர்ந்து அந்த மாணவியும் ஓடினார். இதற்கிடையே குணசேகரன் அங்குள்ள காட்டுப் பகுதிக்குள் சென்றார். இதை அறியாமல் அந்த மாணவியும்  அங்கு சென்றார். பின்னர் தான் காட்டுப் பகுதியில் இருப்பதை அறிந்த மாணவி தப்பிச் செல்ல முயன்றார். ஆனால் குணசேகரன் அந்த மாணவியை மடக்கி பிடித்து மிரட்டி செல்போன் மூலம் ஆபாசமாக படம் எடுத்தார்.
இதை அடுத்து அந்த ஆபாச படத்தை வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க தான் சொல்லும்படி கேட்க வேண்டும் என்று கூறி மிரட்டி அந்த மாணவியை பலாத்காரம் செய்தார். இதை அடுத்து குணசேகரன் அந்த மாணவியின் ஆபாச புகைப் படத்தை தனது நண்பர்களான விஜய் உட்பட இரண்டு பேரின் வாட்ஸ் அப்புக்கு எண்ணுக்கு அனுப்பினார். அதைப் பார்த்து அவர்கள் இரண்டு பேரும் அந்த மாணவியை சந்தித்து எங்களுடன் வந்தால் உனது காதலனை பார்க்க உதவி செய்கிறேன் என்று கூறியுள்ளனர். இதை நம்பி அந்த மாணவி அவர்களுடன் சென்றார். உடனே அவர்கள் இரண்டு பேரும் அந்த மாணவியை அங்குள்ள மாந்தோப்புக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சடைந்த மாணவி அவர்களிடமிருந்து தப்பி வந்தார். பின்னர் அவர் தனக்கு நடந்த கொடுமையை பற்றி பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பேரூர் மகளிர் காவல் துறை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குணசேகரன் கைது செய்தனர். விஜய் உட்பட இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.