கோவை அருகே காரில் கடத்தப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல். வியாபாரி கைது.. கோவை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை தலைவராக காமினி பொறுப்பேற்ற பிறகு தமிழகம் முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க ...
வேலை செய்த வீட்டில் தங்க .வைர நகைகள் திருட்டு பெண்மீது புகார்.. கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி அரவிந்தன். பிசியாலஜிஸ்ட்.இவரது வீட்டில் தமிழ்ச்செல்வி ( வயது 45) என்பவர் வேலை செய்துவந்தார். வீட்டிலே தங்கி இருந்தார். இவரது வீட்டில் இருந்த12 பவுன் தங்க நகைகள் 2ஜோடி வைர கம்மல், ...
கோவை பி.என்.புதூரில் உள்ள பொம்ம நாயக்கர் வீதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் அங்கு திடீர சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக பி.என்.பதூர்,பாரதிதாசன் விதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது43) செல்வபுரம் எல்.ஐ.சி காலனி ...
கோவை சரவணம்பட்டி வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஒய். ஜி. எஸ். நகரை சேர்ந்தவர் மணிமாறன்.(வயது 52) தனியார் நிறுவனத்தில் சீனியர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 20-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த வேலைக்காக சென்னைக்கு சென்று இருந்தார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது அவரது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. யாரோ ...
கோவை அருகே உள்ள குனியமுத்தூர் பி .கே. புதூர் மதுரை வீரன் கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜன். இவரது 27 வயது மகளுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 30) என்பவர் பிறந்தநாள் வாழ்த்து சொல்ல விரும்பினாராம் . அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ...
கோவை சூலூர் அருகே உள்ள பாரதிபுரத்தில் ஒரு திருமண மண்டபம் அருகே சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன், சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் நேற்றிரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ...
கோவை பேரூர் பக்கம் உள்ள மாதம்பட்டி,சிறுவாணி ரோடு ,இந்திரா காலனியை சேர்ந்தவர் துரைசாமி. இவரத மகன் வடிவேல்( வயது 42) சிலைகள் செய்யும் சிற்பி. இவர் நேற்று காளப்பட்டியில் உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் பின்புறம் பிணமாக கிடந்தார்..இவரது உடலில் ரத்தக்காயம் இருந்தது. இது குறித்து காளப்பட்டி கிராம நிர்வாக அதிகாரி குமாரசாமி கோவில்பாளையம் போலீசில் புகார் ...
கோவை மாவட்டம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒரு புகார்கொடுத்தார். அதில் தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருவதாகவும், இந்நிலையில் தனது கணவர் போலியான முகநூல் கணக்கை தொடங்கி அதில் அந்தப் பெண் மற்றும் அவரது ...
தமிழகத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து வாங்கப்பட்டதாக 56 ஆயிரம் சிம் கார்டுகளை முடக்கி, விற்பனை பிரதிநிதிகள் 5 பேரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். நாள்தோறும் வங்கியிலிருந்து பேசுவதாகவும், ஆதார் கார்டு, பான் கார்டு ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும் என்றும் செல்போன் மூலம் மர்ம நபர்கள் பொதுமக்களை தொடர்பு கொண்டு பல்வேறு மோசடி செயல்களில் ...
கோவை மேட்டுப்பாளையம் ரோட்டை சேர்ந்தவர் ரவி .இவர் இறந்துவிட்டார் .இவரது மனைவி ராஜலெட்சுமி ( வயது 67 )இவர் நேற்று கே. கே. புதூர் .அம்மாசை வீதியில் நடந்து சென்றார். அப்போது ஸ்கூட்டரில் வந்த ஒரு ஆசாமி இவரிடம் முகவரி கேட்பது போல நடித்து அருகில் சென்று அவர் அணிந்திருந்த 4 பவுன தங்கச் செயினை ...













