வேலை செய்த வீட்டில் தங்க .வைர நகைகள் திருட்டு பெண் மீது புகார்..

வேலை செய்த வீட்டில் தங்க .வைர நகைகள் திருட்டு பெண்மீது புகார்..  கோவை ராமநாதபுரம் கிருஷ்ணசாமி நகர் போஸ்ட் ஆபீஸ் ரோட்டை சேர்ந்தவர் ஸ்ரீதேவி அரவிந்தன். பிசியாலஜிஸ்ட்.இவரது வீட்டில் தமிழ்ச்செல்வி ( வயது 45) என்பவர் வேலை செய்துவந்தார். வீட்டிலே தங்கி இருந்தார். இவரது வீட்டில் இருந்த12 பவுன் தங்க நகைகள் 2ஜோடி வைர கம்மல், 4 கைக்கடிகாரம், ரூ 2 லட்சம் பணம்ஆகிவற்றைகாணவில்லை இது குறித்து ஸ்ரீதேவி அரவிந்தன் ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார் புகாரில் தனது வீட்டில் வேலை செய்து வரும் தமிழ்ச்செல்வி(வயது 45) என்பவர் தான் இந்த நகை-பணத்தைதிருடி இருப்பதாக கூறியுள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ்செல்வியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.