கோவை மாவட்டத்தில், டாஸ்மாக் நிறுவனத்தின் கீழ் கோவை வடக்கில், 166 மதுக்கடைகள், தெற்கில், 149 மதுக்கடைகள் செயல்படுகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட கடைகளில், அனுமதியின்றி, விதிமுறைக்கு மாறாக பார் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, நள்ளிரவு 12 மணிக்குச் சென்றாலும், அதிகாலை, 6 மணிக்கு சென்றாலும் மது விற்பனை நடந்து வருகிறது. இதையடுத்து ...
கோவை அருகே உள்ள வெள்ளலூர் ,ராமசாமி கவுண்டர் வீதியை சேர்ந்தவர் சசிகுமார் ( வயது 38) தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று நஞ்சுண்டபுரம் ரயில்வே பாலம் அருகே நடந்து சென்றார். அப்போது அங்கு வந்த ஒரு ஆசாமி கத்தியை காட்டி மிரட்டி இவரிடம் இருந்து 2 ஆயிரம் ரூபாயை கொள்ளை ...
தமிழ்நாடு சிறைத்துறை டி.ஜி.பி .அமரேஷ் பூஜாரி உத்தரவின் பேரில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளில் ” வரும் முன் காத்தல்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது .இதன்படி கோவை மத்திய சிறையில் கைதிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. அந்த முகாமில் கைதிகளுக்கு ரத்த அழுத்தம் ,சர்க்கரை, இ.சி.ஜி .உள்ளிட்ட பொது மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.நோயால் ...
கோவையை அடுத்த சூலூர் பக்கம் உள்ள பள்ளபாளையம், பஞ்சாயத்து அலுவலக ரோட்டை சேர்ந்தவர் சசிவர்ணம் (வயது 53 )அதே பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் அங்குள்ள எல்.அன்டிபைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஜீப் இவர் மீது மோதியது. இதில் சசிவர்ணம் ...
கோவை பீளமேடு, ஹட் கோ காலனியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் கஸ்தூரி (வயது 19) சூலூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் பயிற்சி கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எங்கோ மாயமாகிவிட்டார்.இது குறித்து அவரது தாயார் ...
கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசு ,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் நேற்று மாலை சாய்பாபா காலனி நாக முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 1300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 ...
கோவை குனியமுத்தூரை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 45). டிரைவர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். சண்முகவேலின் வீட்டு அருகே 3 வயது சிறுமி உள்ளது. இந்த சிறுமி அடிக்கடி இவரது வீட்டிற்கு வருவது வழக்கம். அந்த சிறுமிக்கு சண்முகவேல் சாக்லேட், மிட்டாய் ஆகியவற்றை வாங்கி கொடுத்து ...
கோவை : ஈரோடு மாவட்டம் கோணார் பாளையத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 24) இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி தற்போது விவாகரத்து பெற்று கோவை குறிஞ்சி கார்டன் திருநகரில் வசிக்கும் பிரசாந்த் என்பவருக்கும் 9-3-22 அன்று 2-வது திருமணம் நடந்தது.திருமணத்தின் போது பெற்றோர்கள் 25 பவுன் நகை போட்டனர்.இந்த நிலையில் பிரசாந்தின் தாயார் ஈஸ்வரி மேலும் 15 ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், ‘விபத்தில்லா கோவையை உருவாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனர் மதிவாணன் மேற்பார்வையில், போலீசார் நேற்று முன்தினம் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அதன்படி, லட்சுமி மில் சந்திப்பு, நவ இந்தியா சந்திப்பு, அத்திப்பாளையம் பிரிவு சந்திப்பு, சரவணம்பட்டி சோதனைச் சாவடி, சரவணம்பட்டி ...
கோவை: ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையை முன்னிட்டு, கோவையில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழை) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை அவினாசி ரோடு பழைய மேம்பாலம்,குட்ஷெட் ரோடு, புருக்பீல்டு ரோடு, சிந்தாமணி சந்திப்பு, கவுலிபிரவுன்ரோடு, லாலி ...