கோவையில் கஞ்சா விற்ற 5 பேர் கைது..!

கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசு ,சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் ஆகியோர் நேற்று மாலை சாய்பாபா காலனி நாக முத்துமாரியம்மன் கோவில் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து சோதனை செய்தனர் .அவர்களிடம் 1300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கணபதி சுப்பம்மாள் லேஅவுட் சேர்ந்த சஞ்சித் (வயது 24) ரத்தினபுரி முருகன் நகரை சேர்ந்த கோபிநாத் ( வயது 27) சங்கனூர் ரோடு கண்ணப்ப நகர் சேர்ந்த ஆகாஷ் (வயது 24) சரவணகுமார் (வயது 31) கவதம் (வயது 22) என்பது தெரிய வந்தது. இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..