கல்லூரிக்குச் சென்ற கோவை நர்சிங் மாணவி திடீர் மாயம்..!

கோவை பீளமேடு, ஹட் கோ காலனியை சேர்ந்தவர் குப்பன். இவரது மகள் கஸ்தூரி (வயது 19) சூலூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் பயிற்சி கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். 17ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை .அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எங்கோ மாயமாகிவிட்டார்.இது குறித்து அவரது தாயார் ஜோதி பீளமேடு போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.