கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்-கணவர் உள்பட 4 பேர் மீது இளம்பெண் புகார்..!

கோவை : ஈரோடு மாவட்டம் கோணார் பாளையத்தை சேர்ந்தவர் நந்தினி (வயது 24) இவருக்கும் ஏற்கனவே திருமணமாகி தற்போது விவாகரத்து பெற்று கோவை குறிஞ்சி கார்டன் திருநகரில் வசிக்கும் பிரசாந்த் என்பவருக்கும் 9-3-22 அன்று 2-வது திருமணம் நடந்தது.திருமணத்தின் போது பெற்றோர்கள் 25 பவுன் நகை போட்டனர்.இந்த நிலையில் பிரசாந்தின் தாயார் ஈஸ்வரி மேலும் 15 பவுன் நகை கேட்டு நந்தினியை கொடுமைப்படுத்தினாராம். இதனால் நந்தினி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நந்தினியின் தந்தை நந்தினியை அழைத்துக் கொண்டு கணவர் பிரசாந்த் வீட்டுக்கு வந்தார். அவர்களை கணவர் பிரசாந்த் மாமனார் வெங்கடாசலம் மாமியார் ஈஸ்வரி ,சகோதரர் பிரவீன் ஆகியோர் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து நந்தினி கோவை மேற்கு பகுதி அனைத்து மகளீர் போலீசில் புகார் செய்தார். போலீசார் நந்தினியின் கணவர் பிரசாந்த், மாமனார் வெங்கடாசலம் மாமியார் ஈஸ்வரி, சகோதரர் பிரவின் ஆகியோர் மீது கொலை மிரட்டல், வரதட்சணை கொடுமை ஆகிய பிரிவுகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.