கோவை ஆர். எஸ் .புரம் தடாகம் ரோடு கம்பன் நகரை சேர்ந்தவர்சுப்ரமணியம்.இவரது மனைவி சங்கவி (வயது 27)இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக ஒரே வீட்டில் கணவன்- மனைவியாக வசித்து வந்தனர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சுப்பிரமணியம் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.சுப்ரமணியம் ஏற்கனவே திருமணம் ஆனவர்.இவரது சொந்த ஊர் தூத்துக்குடி..இந்த நிலையில் ...

கோவை ஆவாரம்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 34) இவர் கடந்த மார்ச் மாதம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சில ரவுடிகளால் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டியும் , துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சஞ்சய் ராஜா (வயது 36) சஞ்சய் குமார் உள்ளிட்ட சிலர் கைது ...

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் தொண்டர்களோடு சேர்ந்து இபிஎஸ் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார். அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், ...

காந்திநகர்: இன்று(மே 12) குஜராத் செல்லும் பிரதமர் நரேந்திர மோடி சுமார் ரூ.4,400 மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்க இருக்கிறார். இது குஜராத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இன்று குஜராத்தில் அகில பாரதிய சிக்ஷா சங்க அதிவேஷன் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் காலை 10.30 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதன் பின்னர் ...

தூத்துக்குடி: வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலை தொடர்ந்து தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படடது. தூத்துக்குடி பகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென பலத்த சூறாவளி காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக திண்டாடினர். வங்கக்கடலில் உருவாகி உள்ள மொக்கா புயல், போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ ...

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா கூவக்காபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றுபவர் ஜெனிஃபர் டார்த்தி (வயது 30). இவருடைய கணவர் ஏசுராஜ் (வயது 36). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் திமுக பிரமுகர் தினேஷ்பாபு (வயது 30) துபாயில் நல்ல ஊதியத்தில் 2 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். பிறகு திருப்பூர் வந்து கார்மெண்ட்ஸ் தொழில் ...

சத்தியமங்கலம்: அக்காவுக்கு ஆபரேஷன் மருத்துவமனைக்கு செல்ல லீவு வேண்டும் என கேட்கும் மின் ஊழியரை தொலைத்து விடுவேன் என மிரட்டும் இள மின் பொறியாளர் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில்  இளமின் பொறியாளராக பணிபுரியும் தீபக் என்பவர் அதே மின் ...

ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்தில் உள்ள பார்வதிபுரம் அருகே மின்சாரம் தாக்கி நான்கு யானைகள் உயிரிழந்தது.. ஆந்திர மாநிலம் மன்யம் மாவட்டத்திலுள்ள பார்வதிபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் சுமார் 20க்கும் மேற்பட்ட யானைகள் வசித்து வருகின்றன. அந்த யானைகள் உணவு, குடிதண்ணீர் ஆகியவற்றிற்காக அடிக்கடி அங்குள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்த ...

நெல்லை: நெல்லை மாவட்டம் பல் பிடுங்கிய விவகாரத்தில் 24 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி.சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், சுத்தமல்லி காவல்நிலைய போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் ...

மதம் மாறி செல்பவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார். இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர் சந்திப்பு தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொஞ்சம் கொஞ்சமாக ...