கள்ளக்காதல் தகராறு… பெண்ணின் தலைமுடியை வெட்டி உருட்டு கட்டையால் தாக்கி கொல்ல முயற்சி- தந்தை,மகள் கைது..!

கோவை ஆர். எஸ் .புரம் தடாகம் ரோடு கம்பன் நகரை சேர்ந்தவர்சுப்ரமணியம்.இவரது மனைவி சங்கவி (வயது 27)இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களாக ஒரே வீட்டில் கணவன்- மனைவியாக வசித்து வந்தனர் பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக சுப்பிரமணியம் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார்.சுப்ரமணியம் ஏற்கனவே திருமணம் ஆனவர்.இவரது சொந்த ஊர் தூத்துக்குடி..இந்த நிலையில் சுப்ரமணியத்தின் முதல் மனைவியான ரத்தினபுரி கண்ணுசாமி வீதியில் வசித்து வரும் அனந்த லட்சுமி ( வயது 33) உறவினர்கள் சங்கர் கணேஷ் ராஜேஷ்வரி, தந்தை சிவகுரு ஆகியோர் சங்கவியின் வீட்டுக்கு சென்று அவரை உருட்டு கட்டையால் தாக்கி,கீழே பிடித்து தள்ளி, தலை முடியை வெட்டினார்கள். இதுகுறித்து ஆர். எஸ் .புரம் போலீசில் சங்கவி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சுப்ரமணியத்தின் முதல் மனைவி அனந்த லட்சுமி ( வயது 33) அவரது தந்தை சிவகுரு (வயது 66) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இது தொடர்பாக சங்கர் கணேஷ் ராஜேஸ்வரி ஆகியோரை தேடி வருகிறார்கள். அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,கொலை மிரட்டல் தாக்குதல் உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..