மின் ஊழியரை மிரட்டும் இள மின் பொறியாளர்- சமூக வலைதளங்களில் வைரலாகும் ஆடியோ.!!

சத்தியமங்கலம்: அக்காவுக்கு ஆபரேஷன் மருத்துவமனைக்கு செல்ல லீவு வேண்டும் என கேட்கும் மின் ஊழியரை தொலைத்து விடுவேன் என மிரட்டும் இள மின் பொறியாளர் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது..
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில்  இளமின் பொறியாளராக பணிபுரியும் தீபக் என்பவர் அதே மின் நிலையத்தில்
மின் ஊழியராக (கேங்மேன்) பணிபுரியும் ஹரிராஜன் என்பவரிடம், நான் சொல்கிற வேலையை செய்யவில்லை என்றால் தொலைத்து விடுவேன்,போனை வை டா என போனில் மிரட்டும் ஆடியோ வெளியாகி உள்ளது.
அந்த ஆடியோவில், மூன்று நாள் ஷிப்ட் பார்த்திருக்கிறேன். அக்காவுக்கு ஆபரேஷன். மருத்துவமனைக்கு செல்ல லீவு வேண்டும் என கேங்மேன் ஹரிராஜன், இள மின் பொறியாளர் தீபக்கிடம் பேசுகிறார். அதற்கு தீபக் லீவு எல்லாம் தர முடியாது. நான் சொல்லும்போது தான் நீ லீவு எடுக்க வேண்டும். அதிகாரிகளை அனுசரித்து போனால் ஒட்டிக்கலாம். இல்லையென்றால் தொலைத்து விடுவேன் என மிரட்டுகிறார். நான் அமைதியாக இருப்பேன் என நினைத்துக் கொள்ளாதே.. ஒழுக்கமாக சொல்கிற வேலையை செய்ய வேண்டும். என மீண்டும் இள மின் பொறியாளர் தீபக் மிரட்டுகிறார். அதற்கு மின் ஊழியர் ஹரிராஜன் நீங்க சொல்கிற வேலையை செய்து கொண்டு தான் இருக்கிறேன். உங்க பேச்சை மீறவில்லை எனக் கூற அதற்கு ஆவேசம் அடைந்த இள மின் பொறியாளர் தீபக், குறுக்கே பேசாதே, வைடா போனை என கூறுகிறார். இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து இளமின் பொறியாளர் தீபக்கிடம் கேட்டபோது ஹரிராஜன் அடிக்கடி டிவி எடுத்துக் கொள்வதால் போனில் பேசியதாகவும், இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு விளக்கம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்..