கோவையில் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட ரவுடி உட்பட 3 பேர் மீது வழக்கு..!

கோவை ஆவாரம்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சத்திய பாண்டி (வயது 34) இவர் கடந்த மார்ச் மாதம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் சில ரவுடிகளால் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டியும் , துப்பாக்கியால் சுட்டும் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான சஞ்சய் ராஜா (வயது 36) சஞ்சய் குமார் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டனர். சத்திய பாண்டி மற்றும் சஞ்சய் ராஜா ,ஆகியோர் ரவுடி கும்பல் தலைவர்களாக செயல்பட்டதும் அவர்களுக்குள் இருந்த தகராறு காரணமாக அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்தனர். மேலும் அவர்கள் பீளமேடு பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலரை கஞ்சா போதை மாத்திரை விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயலுக்கு பயன்படுத்தி வந்ததாக தெரிகிறது. சஞ்சய் ராஜாவிற்கு ஆதரவாளரான கல்லூரி மாணவர்கள் அஸ்வின் ( வயது 20) என்பவரை சத்திய பாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் 2 பேர் சேர்ந்து கடந்த ஆண்டு அக்டோர் மாதம் மோட்டார் சைக்கிளில் கொடிசியா பகுதிக்கு கடத்திச் சென்றனர் . பின்னர் அவரிடம் இருந்த ரூ.5 ஆயிரத்து பறித்துவிட்டு சஞ்சய் ராஜாவுக்கு ஆதரவாக இருக்கக்கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதேபோல் பீளமேட்டில் விடுதியில் தங்கி படித்த திண்டுக்கல், வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த எபினேசர் ஜோசுவா (வயது 20) என்பவரை சத்தியபாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள 2 பேர் கடத்தினர். பின்னர் அவரை கத்தியை காட்டி மிரட்டி ரூ 43 ஆயிரத்து கொள்ளை அடித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பீளமேடு போலீ சார் தற்போது கொலையான சத்தியபாண்டி மற்றும் அவரது கூட்டாளிகள் இரண்டு பேர் மீது 2 வழக்குகள் பதிவு செய்தனர். சத்திய பாண்டி கொலை செய்யப்பட்ட பிறகு அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது..