கட்டிடம் கட்டும் பணியில் இருக்கும்போது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாப பலி..!

கோவை : தர்மபுரி மாவட்டம், கோபி நத்தம் பட்டியைச் சேர்ந்தவர் சின்னையன் ( வயது 47)கட்டிட தொழிலாளி. இவர் ரத்தினபுரி ,எம்ஜிஆர் நகரில் தங்கி இருந்து கட்டிட வேலை செய்து வந்தார் .நேற்று இவர் மதுக்கரை வழுக்கு பாறையில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென்று கால் தவறி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்குபலத்த காயம் ஏற்பட்டது .சிகிச்சைக்காகஅங்குள்ள தனியார் மருத்துவமனைக்குஎடுத்துச் சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். வழியில் அவர் இறந்தார். இது குறித்து அவரது மகன் செல்லதுரை மதுக்கரை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வைரம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.