கோவை கல்லூரி மாணவி திடீர் மாயம்..!

கோவையை அடுத்த கிணத்துக்கடவு பக்கம் உள்ள சிங்கையன்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் நிஷாந்தினி ( வயது 17 )பொள்ளாச்சி ரோடு தனியார் கல்லூரியில் பி..காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 29ஆம் தேதி கம்ப்யூட்டர் வகுப்புக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து தந்தை பழனிச்சாமி கிணத்துக்கடவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.