கடன் தொல்லை.. காதல் திருமணம் செய்த இளம்தம்பதி தூக்கு போட்டு தற்கொலை..

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே உள்ள தாளியூர், ராமகிருஷ்ணன் நகரைச் சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 35) இவரது மனைவி வெண்ணிலா (வயது 30) இவர்கள் 2 பேரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டனர் . தற்போது இவர்கள் வசிக்கும் வீட்டை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கடன் வாங்கி வாங்கியதாக கூறப்படுகிறது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்த மன விரக்தியில் இருந்த தம்பதிகள், நண்பர்கள் உறவினர்களிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது.இந்த பணத்தை அவர்களால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை.இதனால் மனம் உடைந்த தம்பதி தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தனர்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் தங்கி இருந்த வீட்டில் உள்ள தனித்தனி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்கள் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அறிந்த பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் தொண்டாமுத்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.சப் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் அங்கு சென்று கதவை திறந்து பார்த்த போது தம்பதி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.