கோவை கார் வெடிப்பு சம்பவம்:  கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம்

கோவை கார் வெடிப்பு சம்பவம்:  கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம்

கோவையில் கடந்த 23ஆம் தேதி டவுன்ஹால் பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது குறித்து, தற்போது N.I.A அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோட்டை ஈஸ்வரன் சுவாமியால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக பா.ஜ.க, உட்பட பல்வேறு இந்து அமைப்பினர், சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், இன்று காலை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரிகளிடம் சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இந்நிகழ்வில், பா.ஜ.க நிர்வாகிகள், இந்து இக்கங்கள் சேர்ந்த பலர் உடன் இருந்தனர். மேலும், கோவையில் பா.ஜ.க மகளிர் அணி சார்பில் கோவிலில் கூட்டு பிராத்தனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்து கொண்ட மகளிர் கந்தசஷ்டி கவசத்தை வாசித்தனர். இன்று கோட்டை ஈஸ்வரன் கோவிலில், பா.ஜ.க மாநிலத் தலைவர் வருகையை ஒட்டி அப்பகுதி முழுவதும் 100 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாவது:-

கோவையில் பெரும் நிகழ்வு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதற்காக கோட்டை ஈஸ்வரன், முருகனுக்கு நன்றி கடன் செலுத்தி விட்டு கோவிலுக்கு மத நல்லிணக்கம் மத ஒற்றுமை கோவை மக்கள் என்னுடைய வாழ்க்கை பயணம் நன்றாக இருக்க வேண்டும் என்று கந்த சஷ்டி கவசத்தை ஒன்றாக பாடி உள்ளோம் என தெரிவித்தார். 23″ஆம் தேதி அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது அதன் பின்பே எட்டு நாட்களாக அரசியல் கட்சிகள் பத்திரிக்கையாளர்கள் பேசி வருகிறோம் என தெரிவித்த அவர் இதைத் தாண்டி கோவை செல்ல வேண்டும் என்பதற்காக இங்கு வந்துள்ளதாக தெரிவித்தார். 1998 குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவையின் வளர்ச்சி என்பது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என தெரிவித்த அவர் அந்த குண்டு வெடிப்பிற்கு பிறகு கோவையின் வளர்ச்சி பின்னோக்கி சென்றுள்ளதாக கூறினார். கடந்த பத்து வருடங்களாக கோவில் உள்ள மக்கள் தொழிலதிபர்கள் கோவையை முன்னெடுத்து செல்கின்றனர் என கூறிய அவர் இந்த நேரத்தில் இந்த தற்கொலை தாக்குதல் நடந்திருந்தால் கோவை மாவட்டம் இன்னும் 20 வருடங்கள் பின்னோக்கி சென்றிருக்கும் என தெரிவித்தார். அதனை தடுத்து நிறுத்திய முதல் காக்கும் கடவுள்களாக இப்பொழுது இருக்கக்கூடிய காவல் துறையினர் எனக் கூறிய அவர் துணை தாக்குதல் எதுவும் நடைபெறாத வண்ணம் உயிரை பணயம் வைத்து பணி செய்துள்ளதாக கூறினார். எனவே கோவை மாநகர காவல் துறையினருக்கு நன்றிகள் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார். சதிகார்கள் மதத்தால் பிளவுபடுத்த முயற்சித்தாலும் கூட கோவை மக்கள் ஒன்றாக இருப்பதாக தெரிவித்தார். 23ம் தேதி நடந்த சம்பவத்திற்கு பிறகு இங்குள்ள இஸ்லாமிய பெருமக்கள் மதகுருமார்கள் கூட நல்ல கருத்துக்களை முன்வைத்துள்ளதாக தெரிவித்தார்.

கோவையில் உள்ள மக்கள் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது வன்முறையை கையில் எடுப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடாது என்பது எனது வேண்டுகோள் எனவும் தெரிவித்தார். மாநில அரசிடம் நாங்கள் வைத்துள்ள கேள்விகள் எல்லாம் மாநில அரசு நன்றாக செயல்பட வேண்டும் என்பதற்காகவே தவிர மாநில அரசை குற்றம் குறை காண்பிக்கவோ மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்ல என தெரிவித்தார். மேலும் சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட சில பொருட்கள் என சிலவற்றை (கோலிகுண்டு, ஆணி) காண்பித்தார். இன்னும் காவல்துறையினர் இதனை சிலிண்டர் வெடித்தது என்று கூறுவதற்கு என்ன காரணம் அதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார். ஐ எஸ்.ஐ.எஸ் என்பது தவறான ஐடியாலஜி என இஸ்லாமிய மதத்தில் உள்ள குருமார்களே சொல்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
எனவே அவர்களை விடக்கூடாது அவர்களின் மீது கோபமாக தான் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். கூடிய விரைவில் இஸ்லாமிய குருமார்களையும் சந்திக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் காவல்துறையில் சில கவனக்குறைவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் உளவு பிரிவு சிலரை கண்காணிக்கும் பணியை தவற விட்டு விட்டார்கள் எனவும் தெரிவித்தார். மேலும் காவல்துறையில் பணி சுமை உள்ளதாகவும் ஆள்பற்றா குறை இருப்பதாகவும் தெரிவித்தார்.